⚡ மின்மாற்றி காயில் திருட்டு – காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
விழுப்புரம் மின்பகிர்மான வட்டத்தின் பூத்தமேடு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட பூத்தமேடு துணை மின் நிலையம்–III (100 KVA) மின்மாற்றியில் இருந்த காயில் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்சார உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

